நிலக்கரியினை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது
#SriLanka
#Lanka4
#Tamil People
Prabha Praneetha
1 year ago
மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியினை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
சம்பிரதாயங்களை முடித்ததன் பின்னர் கப்பலிலுள்ள நிலக்கரியினை இறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அந்த அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் நாட்டில் இனிமேல் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என நம்பப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது