தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று வெளியான உண்மைகள்

#Court Order #Colombo
Prathees
3 years ago
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று வெளியான உண்மைகள்

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய திறந்த நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டதால், மரண விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்துமாறு உயிரிழந்தவரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை என நீதவான் மேலும் தெரிவித்தார்.

அதனையடுத்து, இந்த மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் தொடர்பான விசாரணை நீதவான் அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சகோதரரின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது.

மேலதிக சாட்சியங்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4