எல்லாவற்றையும் மூடி மறைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

#Actress #Actor #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
எல்லாவற்றையும் மூடி மறைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீப காலமாகவே கதாநாயகிகள் சோலோ ஹீரோயின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தான் கெத்தாக நினைக்கின்றனர். அந்த வகையில் டிரைவர் ஜமுனா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ் எதார்த்தமான நடிப்பில் நடித்து வெளிவந்தது.

வத்திக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்களும் கால் டாக்ஸி ஓட்டுநராக இருக்கலாம் என்ற சவால் நிறைந்த நீதா பாத்திரத்தை ஏற்றி நடித்தார்.

மேலும் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்திருந்த இந்தப் படத்திற்கு சோசியல் மீடியாவில் கலவையான விமர்சனங்களுக்கு குவிந்தது. இதனால் வெளிவந்த முதல் நாளே படத்தை பார்க்க யாரும் வராமல் பல தியேட்டர்களில் படத்தை தூக்கி விட்டார்கள்.

அதை ஓடிடி-யில் வெளியிட்டு அதை பார்த்த பலரும் இதில் ஏன் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்தார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். தற்போது முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தப் படத்தின் சக்சஸ் மீட் என்று ஒரு விழாவை எடுத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். யாரை ஏமாற்றுவதற்காக இது மாதிரி வெற்றி விழா நடைபெறுகிறது என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த படம் ரிலீஸ் ஆன டிசம்பர் 30 ஆம் தேதி அன்று த்ரிஷாவின் ராங்கி மற்றும் கோவை சரளாவின் செம்பி உள்ளிட்ட படங்களும் வெளியானது. இதனால் அந்த படங்களை காட்டிலும் இந்த படத்திற்கு மிகக் குறைந்த வசூலை முதல் நாளில் கிடைத்தது. ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா படத்திற்கு முதல் நாளில் 21 லட்சம் மட்டுமே வசூல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என நினைத்த படக்குழுவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். நினைத்ததை விட படுமோசமான வசூலை பெற்ற டிரைவர் ஜமுனா படகுழு எப்படி சக்சஸ் பார்ட்டி எல்லாம் கொண்டாடுகிறது என திரை பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!