புத்தளத்தில் உணவகமொன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
Prasu
1 year ago
புத்தளம் பாலாவி பகுதியில் உணவகமொன்றில் இன்று ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீப்பற்றியுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக குறித்த தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீயில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.