நேபாள நாடாளுமன்றம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி மரணம்
#நேபாளம்
#Parliament
#Suicide
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
1 year ago
நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியினுடைய புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் நேற்று நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில் ஒரு நபர் திடீரென்று தன் மீது டீசலை ஊற்றி நெருப்பு வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் உடனடியாக அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பலியானார்.
விசாரணையில், 37 வயதுடைய பிரேம் பிரசாத் ஆச்சார்யா என்ற என்று தெரிய வந்திருக்கிறது என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது