இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்
#United National Party
#Ranil wickremesinghe
#Sri Lanka President
#SriLanka
#Lanka4
Kanimoli
1 year ago
இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தி;க்கவுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி 3 வெள்ளிக்கிழமையன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் விரிவுரை ஆற்றவுள்ளார்
செயலாளர் நாயகம் பெப்ரவரி 1ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வந்து 2023 பெப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.