கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Prabha Praneetha
1 year ago
அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோயால் 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் பலியாகியுள்ளனர்
.
எனினும் 2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது.
அதற்கு முன்னர் 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர்.இதன்போது 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகினர்
இருந்தபோதும் 2020-ம் ஆண்டு இறந்தவர்கள் எண்ணிக்கை, அதை தாண்டிவிட்டது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களே கொரோனா காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தமை கண்டறியப்பட்டது