15 வயது காதலியின் படுக்கையறைக்குள் மின்சாரம் துண்டிக்கப்படும்வரை ஒளிந்திருந்த காதலன்: பொலிஸிடம் ஒப்படைத்த தந்தை
15 வயது காதலியை சந்திக்க மாலையில் வீட்டிற்கு வந்த காதலன், மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காதலியின் படுக்கைக்கு அடியில் பல மணி நேரம் பதுங்கி இருந்த நிலையில் சிறுமியின் தந்தை பிடித்து பாலிசில் ஒப்படைத்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி தனது தாயின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த இளைஞனை ஐந்து மாதங்களுக்கு முன்னர் அறிந்து அவருடன் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காதல் உறவை அறிந்ததும் சிறுமியின் தாய் பலமுறை தடுத்து நிறுத்துமாறு கூறியும் தாம் அதனை நிறுத்தவில்லை என சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வீட்டிற்கு மாலையில் வந்த சந்தேக நபர் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை சிறுமியின் படுக்கைக்கு அடியில் பல மணிநேரம் தங்கியிருந்ததாக சந்தேகநபரின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுக்கைக்கு அடியில் இருந்த காதலருக்கு இரவில் தாகம் எடுத்ததாகவும், அவர் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அதிகாலை 3.00 மணியளவில் வீட்டில் சத்தம் கேட்டதாகவும் சிறுமியின் தந்தை மின்விளக்கை ஏற்றி அறைக்குள் சென்று பார்த்தபோது, படுக்கைக்கு அடியில் இருந்த காதலரைப் பார்த்து அவரை பிடித்து அடித்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
அதே தந்தை இரவில் சிறுமியின் பெரியம்மாவை வீட்டிற்கு அழைத்த பிறகு சந்தேக நபரை வீட்டின் வரவேற்பறையில் நாற்காலியில் அமர வைத்து, சந்தேக நபரின் பெற்றோரையும் வீட்டிற்கு வரவழைத்து, சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காதலனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தான் தனது காதலியை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.