உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
1 year ago
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்தபின், தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பமாகும் என்று திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக சுமார் ஏழாயிரம் சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது