திருட்டுப் பொருட்களை வைத்திருந்ந ஜே.வி.பியின் நகரசபை உறுப்பினர் கைது
#Police
#Arrest
#Lanka4
Prathees
1 year ago
ஜே.வி.பி பொரலஸ்கமுவ நகரசபை உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கயான் பெரேரா என்ற இந்த நகரசபை உறுப்பினரே கைது செய்யப்பட்டுள்ளார்
அவர் திருடப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் அப்பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து திருடப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.