லியோ படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்கும்படி விஜய் லோகேஷிடம் கூறியதாக தகவல்
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் படப்பிடிப்பு துவங்கும் முன்பே பல கோடி வியாபாரமாகியுள்ளது.
விஜய் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தனி விமானத்தில் கடந்த வாரம் அங்கு சென்ற படக்குழு இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குளிரையும் பொருட்படுத்தாமல் விஜய் ஷூட்டிங் செய்கிறார், ஆனால் அவரது வேகத்திற்கு மற்ற நடிகர்களும் ஓடுகிறார்கள். லோகேஷ் பொதுவாக தனது படங்களை விரைவாக முடிப்பார்.
கமலின் விக்ரம் வெற்றி பெற்றது. லோகேஷின் LCU ரசிகர்களால் விரும்பப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் லியோ படம் லோகேஷ் LCUவை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா அல்லது தனி கதையா என ரசிகர்கள் பேசி வருகின்றனர். படத்தின் ப்ரோமோ வெளியானதும், படம் கண்டிப்பாக லோகேஷின் எல்.சி.யு.வை அடிப்படையாக கொண்டது என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் படம் வெளியான பிறகுதான் படம் எல்.சி.யூவா அல்லது தனிக்கதையா என்பது உறுதியாகத் தெரியும்.
த்ரிஷாவும் விஜய்யும் லியோவில் மீண்டும் இணைந்துள்ளனர். 14 வருடங்களாக கோலிவுட்டில் ஒன்றாக இருக்கும் இவர்கள் மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் மற்றும் பல பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற படங்களில் இருந்து இப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது.