துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,700-ஐ தாண்டியது: இடிபாடுகளில் சிக்கியவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை

#world_news #Turkey #Earthquake #search #Death #Tamilnews #Lanka4
Mayoorikka
1 year ago
துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,700-ஐ தாண்டியது: இடிபாடுகளில் சிக்கியவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,700ஐ தாண்டியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

7 மற்றும் 8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும், குளிர் காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் 12,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர், மேலும் அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 9,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள பலர் மீட்பதற்காக சமூக ஊடகங்களில் செய்திகளை அனுப்பியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இடிபாடுகளில் சிக்கிய நபரின் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பார்க்கப்படுகிறது. தான் தங்கியிருக்கும் இடத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களை தந்து உயிரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுமார் 70 நாடுகளின் மீட்புக் குழுக்கள், உபகரணங்கள் மற்றும் உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!