துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்

#Turkey #Earthquake #football #Death #துருக்கி #கால்பந்து #world_news #Tamilnews #Lanka4
Prasu
1 year ago
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அந்நாட்டின் பிரபல கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஹ்மத் ஐயுப்பின் மரண்த்தை அவரின் கழகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

துருக்கியில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களில் 28 வயதான கோல்கீப்பர் டர்கஸ்லானும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அவரது மனைவி உயிருடன் மீட்கப்பட்டார், ஆனால் நிறுத்தப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.

இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர் என்ற செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் திங்களன்று 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மநிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் துருக்கியில் இரண்டாவது பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

பேரழிவுகரமான நிலநடுக்கத்திற்கு மத்தியில் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகளால் நாடு உலுக்கப்பட்டிருந்தது.  இரண்டாவது நிலநடுக்கம் வெறும் ஐந்து மைல் ஆழத்தில் ஏற்பட்டது.

ஏற்கனவே 5000-க்கும் அதிகமான இறப்பு எண்ணிக்கை - 10,000 ஆக உயரக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

100 ஆண்டுகளில் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்  இதுவாகும். இந்த நிலநடுகம் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!