ஒன்பது மாத குழந்தையை பலியெடுத்த முச்சக்கர வண்டி!
#SriLanka
#Accident
#baby
#மருத்துவர்கள்
#Hospital
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Mayoorikka
1 year ago
குருநாகல் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.