அதிகாரிகளுக்கு எச்சரிக்கை திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

Mani
1 year ago
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்குத்துறை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இக்கூட்டம் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்று கூட்டத்தில் அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நமது ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, அதில் மாதந்தோறும் 1000 பெறக்கூடிய மாணவிகளை மாணவிகள் பாராட்டி வருகின்றன, நம் கண்ணுக்கு முன்னால் மகிழ்ச்சி இதுதான்.  இது போல் தினசரி காலை சிற்றுண்டி வழங்குவதன் மூலமாக பல்லாயிர குடும்பங்களின் நம்மை வாழ்த்தி வருகின்றன, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பயனடைந்துள்ளனர்.  இலவச மின் இணைப்பு பற்றிய விவசாயிகள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றன,  இதேபோல் அனைத்து திட்டங்களிலும் பயன்ப்படுபவர்கள் மகிழ்ச்சி அடைந்ததால் 8 கோடி மக்களுக்கு பாராட்டு அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை திட்டத்திற்கு ஏதாவது ஒரு இடத்தில் சிறு தடங்கல் இருந்திருக்கலாம் அந்த தடங்கல் உங்களுக்குத்தான் தெரியும் அதனை அதிகாரிகள் மத்தியில் கூட்டத்தைக் கூட்டி திட்டத்தை செயல்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது.  திட்டங்கள் எந்த அளவு செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும் 2023 க்குள் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு என்ற நிலையிலே எட்டியாக வேண்டும்.