'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் : நாளை விண்ணில் பாய்கிறது

Mani
1 year ago
'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் : நாளை விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து எஸ்.எஸ்.எல். வி- டி2 ராக்கெட் நாளை காலை 9.18 மணிக்கு 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ)எஸ்.எஸ்.எல். வி- டி2 ராக்கெட் தனது 15 நிமிட பயணத்தில் மூன்று செயற்கைக்கோள்களை 450 கி.மீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் "இ.ஓ.எஸ்-07" செயற்கைக்கோளை, அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் நிறுவனத்தின் "ஜேனஸ்-1" செயற்கைக்கோளை, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தில் "ஆஸாதிசாட்-2" ஆகிய மூன்று செயற்கைக்கோள் ராக்கெட் இந்த ராக்கெட் மூலம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

 "ஆஸாதிசாட்-2" என்பது 750 மாணவர்களின் இணைந்து உருவாக்கிய 8.7கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட "எஸ்.எஸ்.எல்.வி-டி1" ராக்கெட் அதன் இரண்டாம் கட்ட நிலை தோல்வி அடைந்தது.


 அதனைத் தொடர்ந்து சில தொழில்நுட்ப மாற்றங்கள் செயல்பட்டு "எஸ்.எஸ்.எல்.வி-டி2" ராக்கெட் நாளை விண்வெளி ஏவப்படும் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.