ஹொரணை, புளத்சிங்களவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டோகிராஸ் சாரதியான கௌசல்யா சமரசிங்க பலி

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Death #Accident #Tamilnews #Tamil
Prabha Praneetha
3 years ago
ஹொரணை, புளத்சிங்களவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டோகிராஸ் சாரதியான கௌசல்யா சமரசிங்க  பலி

ஹொரணை, புளத்சிங்களவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னணி உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை காலை மத்துகம - ஹொரண பிரதான வீதியில் கோவின்ன என்ற இடத்தில் பஸ்ஸுடன் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த தனது நண்பர்கள் குழுவுடன் கௌசல்யா அதிவேக மோட்டார் சைக்கிளில் (250சிசி) சென்றது தெரியவந்தது.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான கௌசல்யா என்ற பெண்ணே ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4