ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடிப்பு- 4 பேர் உயிரிழப்பு ,10 பேர் காயம்:மேற்கு வங்காளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

#India
Mani
1 year ago
 ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடிப்பு- 4 பேர் உயிரிழப்பு ,10 பேர் காயம்:மேற்கு வங்காளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜெய்நகரில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராஜாபூர்-கராபேக் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரா கிராமத்தில் நேற்று இரவு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஏராளமானோர் திரண்டதால் இரவு 9.30 மணியளவில் முசிராம் ஹல்டர் என்ற பலூன் வியாபாரியின் கடையில் வைக்கப்பட்டிருந்த ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் பலூன் விற்பனையாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தற்போது கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.