பெண் மீது துப்பாக்கிச் சூடு: இரு இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

#SriLanka #Sri Lanka President #Sri Lankan Army #Colombo #Death #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
பெண் மீது துப்பாக்கிச் சூடு: இரு இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

பொரளை பகுதியில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவத் தலைமையக புலனாய்வுப் படையின் இரு இராணுவத்தினரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் லான்ஸ் கோப்ரல் பட்டபொலவைச் சேர்ந்த அவளுன் லஹிரு குமார மற்றும் இராணுவ சிப்பாய் தரிது குமார ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தல்கஹகும்புர பொரளை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரம பத்திவில பகுதியைச் சேர்ந்த மெலனி காஞ்சனா என்ற 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4