இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் - சஜித் பிரேமதாசா

#Sajith Premadasa #Ranil wickremesinghe #SriLanka #srilanka freedom party #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் - சஜித் பிரேமதாசா

இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, திவால்நிலையில் இருந்து வெளிவருவதற்கு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் இலங்கைக்கு இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.

எனினும் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நன்மை  பயக்கும் திட்டங்களையே தாம் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் ஆணை இல்லாமையால், தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து, தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சூழ்ச்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4