காதலியை கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த காதலன் : டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

#Delhi #Murder
Mani
1 year ago
காதலியை கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த காதலன் : டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் உள்ள நஜாப்கரில் உள்ள மித்ரவன் கிராமத்தின் பக்கத்தில் ஒரு உணவகம் உள்ளது.

'குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

துவாரகா நகரில், கூடுதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மித்ரவன் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலட்டை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளோம்.முதற்கட்ட விசாரணையில், சாஹில் இந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த இளம்பெண், அவரிடம் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரீசரில் மறைத்து வைத்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு, டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண், அவரது காதலன் அப்தாப் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் 35க்கும் மேற்பட்ட துண்டுகளாக துண்டு துண்டாக வெட்டப்பட்டது.