தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

#India #SouthAfrica
Mani
3 years ago
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.அவை மத்தியபிரதேசத்தில் உள்ள குனோ வன உயிரின பூங்காவில் விடப்பட்டன.தென்னாப்பிரிக்காவில் இருந்து12 சிறுத்தைகள் விமானம் மூலம் பறந்து வந்துள்ளன. அவர்கள் இப்போது குனோ வனவிலங்கு பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த உணர்வுக்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “12 சிறுத்தைகளின் வருகையால் இந்தியாவின் வனவிலங்குகளின் பன்முகத்தன்மை அதிகரித்துள்ளது” என்று மோடி கூறியுள்ளார்

மராட்டிய மன்னர் சிவாஜியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மராத்தி மொழியில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், தனது 'டுவிட்டர்' பக்கத்தில், லடாக்கிற்கு அனைத்து வானிலை ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைப்பதற்கு 1,681 கோடி ரூபாய் ஒதுக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. லடாக்கின் மிகவும் பின்தங்கிய லுங்நாக் பள்ளத்தாக்கு மக்கள் இதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள், என்றார். இந்நிலையில், லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4