முதலீடுகளுக்கு விரைவான அனுமதியைப் பெற பொருளாதார ஆணைக்குழு நியமனம்: ரணில்

#Ranil wickremesinghe #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #kandy
Prathees
3 years ago
முதலீடுகளுக்கு விரைவான அனுமதியைப் பெற பொருளாதார ஆணைக்குழு நியமனம்: ரணில்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் விரைவாக முதலீடுகளுக்கு அனுமதி பெறுவதற்கு பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இதனால் நாடு பாரிய வருமானத்தை இழக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி, ஹந்தானாவில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4