கினிகத்தேனயில் தோட்ட வீடுகள்  4 முற்றாக எரிந்து நாசம் 

#fire #Accident #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
கினிகத்தேனயில் தோட்ட வீடுகள்  4 முற்றாக எரிந்து நாசம் 

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வொர்த் தோட்டத்திலுள்ள தோட்ட வீடுகளில் வரிசையாக தீ பரவியுள்ளதுடன் 04 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று காலை 10 மணியளவில் அந்த வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற போதே தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

தோட்ட வீடுகளின் வரிசையில் 48 வீடுகள் உள்ளன.

பரவி வந்த தீயை கினிகத்தேன பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து கட்டுப்படுத்தியதாக  பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், 04 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4