கொழும்பை முற்றுகையிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருமளவான தொழில் வல்லுநர்கள்!

#SriLanka #Colombo #Protest #company
Mayoorikka
3 years ago
கொழும்பை முற்றுகையிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருமளவான தொழில் வல்லுநர்கள்!

அரசாங்கத்தின் வரி விதிப்பு முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருமளவான தொழில் வல்லுநர்கள் தற்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகங்கள், பெட்ரோலியம், மின்சாரம், வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஊழியர்கள் ஏராளமானோர் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.

. இதன் காரணமாக கொழும்பு – கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக உள்ள ஒரு வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4