தேர்தலை ஒத்திவையுங்கள்: நாங்கள் சிறிது நேரம் உட்கார்ந்து கத்துவோம் என்று எனக்கு கூறினீர்களே! போட்டுடைத்த ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #Election #Lanka4
Mayoorikka
3 years ago
தேர்தலை ஒத்திவையுங்கள்: நாங்கள் சிறிது நேரம் உட்கார்ந்து கத்துவோம் என்று எனக்கு கூறினீர்களே!  போட்டுடைத்த ஜனாதிபதி

நாட்டின் பொருளாதார நிலையும், தேர்தலை நடத்த பணப் பற்றாக்குறை  பணம் இருந்தாலும் வாக்குகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை, விவாதம் வேண்டுமென்றால் விவாதம் தருகிறேன். அத்தியாவசிய சேவைகள் குறித்த விவாதம் இல்லை. தேர்தலை ஒத்திவைப்பது பற்றிய விவாதம். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு வாக்கெடுப்பு இல்லை.

நான் அரசியல் செய்யாததால் இதில் தலையிடவில்லை. குறிப்பாக இன்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நடத்த முடியாது என்று கூறியுள்ளது.

இந்த நாட்டின் பொருளாதார நிலையும், தேர்தலை நடத்த பணப் பற்றாக்குறையும் இருப்பதாக நான் கூறினேன். உறுப்பினர் எண்ணிக்கையை 5 ,000 ஆக குறைக்க தேர்தல் ஆணையத்திடம் கூறினேன்.

இப்போது பணம் இல்லை. தற்போது தேர்தலும் இல்லை. தேர்தலுக்கு பணமும் இல்லை. பணம் இருந்தாலும் வாக்குகள் இல்லை. அதனால் என்ன செய்வது? ஏன் கத்துகிறீர்கள்? இந்த ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு பொறுப்பாகும்.

தேர்தலை ஒத்திவைக்குமாறு எம்.பி.க்கள் என்னிடம் கூறினார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை விரும்பவில்லை. நீங்கள் என்ன சொன்னீர்கள்? நீங்கள் இதை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள், நாங்கள் சிறிது நேரம் உட்கார்ந்து கத்துவோம் என்று எனக்கு கூறினீர்களே.. “

மேலும், பாராளுமன்றத்தில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மானுக்கு தாம் தூது அனுப்பியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தவர் தானே என ஜனாதிபதி கூறியதுடன் அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது தமக்கும் தெரியும் எனவும் முஜுபுர் ரஹ்மானை பாராளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4