பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தேன் என்று பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ்

#Cinema #TamilCinema #Tamil Nadu #Tamil
Mani
3 years ago
பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தேன் என்று பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ்

திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், முறையான பயிற்சி இல்லாமல் தான் நடிக்க வந்ததாக தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மித்ரன் ஜவஹர் 'அரியவன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். நாயகனாக ஈஷான், நாயகியாக பிரணாஸி நடித்துள்ளனர். நவீன் தயாரித்துள்ளார்.

இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நான் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது ஹீரோவாவதற்குத் தேவையான பயிற்சிகள் இல்லை. பார்த்திபன், பாண்டியராஜன் போன்றோரும் பயிற்சியின்றி நடிகர்களாகிவிட்டார்கள். முதல்முறையாக நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.

ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ ஈஷான் நடிக்க பல்வேறு நடிப்புப் பயிற்சி, கராத்தே பயிற்சி எடுத்துள்ளார்.

சினிமாவில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும். இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், தண்டனைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4