தமிழ்நாட்டு கடற்கரையோரம் குவிந்து கிடைக்கும் ஆமை முட்டை!

#Eral sea #beach #Tamilnews #Tamil Nadu
Mani
1 year ago
தமிழ்நாட்டு கடற்கரையோரம் குவிந்து கிடைக்கும் ஆமை முட்டை!

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் குவிந்து இருக்கும் ஆமை முட்டைகள் சுமார் 5,000 முட்டைகளை மீட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் ஏழு வகை கடல் ஆமைகள் அலுங்காமை, சிற்றாமை, பெருந்தலை ஆமை, பச்சையாமை, தோனியாமை ஆகிய ஐந்து ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகிறது

சில காலமாக ஆமைகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது நமது அரசாங்கம் போதையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது மக்கள் மத்தியில் இதனால் கடல் ஆமை என்னிக்கு சற்று உயர்ந்து வருகிறது.

ஆமைகள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை வந்து முட்டையிடும் அதன்படி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில் குறிப்பாக மனப்பாடு பெரிய தாளை கடற்கரையிலும் காயல் முதல் தூத்துக்குடி வரைவிலான பகுதிகளும் மூக்கையூர் சேர்த்துக்கரை முந்தல் பகுதிகளும் ஆமைகள் முட்டையிட்டு வருகிறது

புதிய அறிவிப்பின்படி கொரோன காலகட்டத்தில் பின் ஆமைகள் கடலோரம் அதிக முட்டை இடுகிறது, இதை தமிழ்நாட்டுச் சார்ந்த வனத்துறையினர் முட்டையை சேகரித்து பொறிக்க வைத்து மீண்டும் ஆமை குஞ்சி கடலில் விடுகின்றனர்.

தூத்துக்குடி சரகத்தில் கடந்த 3 மாதத்தில் சுமார் 4 ஆயிரம் முட்டைகளும், திருச்செந்தூர் சரகத்தில் சுமார் 1,000 முட்டைகளும் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த முட்டைகள் அதற்கான பிரத்யேக பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விடப்படும். ஆமைகள் முட்டையிடும் காலத்தில், அந்த முட்டைகளை பாதுகாப்பாக சேகரிப்பதற்காக பிரத்யேகமாக ஆமை பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.