மசோதாக்களுக்கு தெலுங்கானா கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.

#India #State #Court Order #Governor
Mani
1 year ago
மசோதாக்களுக்கு தெலுங்கானா கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.

மசோதாக்களுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்து தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் ஏ.சாந்திகுமார் கூறியதாவது: தெலுங்கானா நகராட்சி திருத்த மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று ஷம்சீர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும்போது, ​​அதற்கு ஆளுநர் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, ஆளுநரின் செயல்பாடுகள் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.