மனித கடத்தல்காரர்களை முறியடிக்க புதிய நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #PrimeMinister #Minister #Crime #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
மனித கடத்தல்காரர்களை முறியடிக்க  புதிய நடவடிக்கை!

மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பயோமெட்ரிக் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனிநபர்களின் உடல் அம்சங்கள் மற்றும் குணாதிசயங்கள் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு கண்கள், கைரேகைகள் மற்றும் பிற உடல் பண்புகள் பெறப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டுச் சேவைப் பணியகம், பணியகச் சட்டத்தில் புதிய திருத்தங்களை முன்வைத்து விதிகளை கடுமையாக்குவதுடன், அதற்காக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்காரவின்  தலையீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4