நிலநடுக்க அபாயத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்

#Earthquake #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
நிலநடுக்க அபாயத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்

எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்க அபாயத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வுகள் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உட்பட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம  தெரிவித்தார்.

கடந்த பருவத்தில் புத்தல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4