ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிப்பத்தில் தாமதம் ஏன்? வெளியாகிய தகவல்

#SriLanka #Election Commission #Parliament #Department #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிப்பத்தில் தாமதம் ஏன்?  வெளியாகிய தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நியமனங்கள் இன்னும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு சுமார் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் தகுதியானவர்களை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சில வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை நான்கைந்து ஆணைக்குழுக்களுக்கு அனுப்பியதன் காரணமாக தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை கூறுகிறது.

மேலும் தகுதியில்லாதவர்களும் கமிஷன் விண்ணப்பங்களை அனுப்பி அவர்களை தனி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்களுக்கு தகுதியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத வெளி நபர்களை நியமிக்க முடியுமா என்பது குறித்தும் அரசியலமைப்பு சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4