சீன எல்லைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் சீன தயாரிப்பு மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை எச்சரிக்கை

#India #IndianArmy #China
Mani
1 year ago
சீன எல்லைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் சீன தயாரிப்பு மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என உளவுத்துறை எச்சரிக்கை

சீன மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அத்தகைய போன்களில் ஸ்பைவேர் மற்றும் மால்வேர் இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

ஏற்கனவே ராணுவ அதிகாரிகள் சீன தயாரிப்பு போன்களை பயன்படுத்த தடை உள்ள நிலையில் தற்போது ராணுவ வீரர்களும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது விவோ, ஓப்போ, ஸையோமி, ஒன்ப்ளஸ், ஹானர், ரியல் மீ, ஜியோனி உள்ளிட்ட சீன தயாரிப்பு செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன.