சரக்கு ரயிலின் இன்ஜினில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது, மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

#India #Railway #Death
Mani
1 year ago
சரக்கு ரயிலின் இன்ஜினில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது, மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் வனப்பகுதியை அடுத்த சுகுஸ் நகர ரயில் நிலையத்தில் நேற்று சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே அதிகாரிகள் சிறுத்தை என்ஜினில் இறந்து கிடந்ததை கண்டனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில் இன்ஜின் மீது ஏறி உயர் அழுத்த மின்கம்பி பாய்ந்து சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.