திரிபுரா முதல்வராக மாணிக் சகா இன்று பதவியேற்றார்

#India #Election #ChiefMinister
Mani
1 year ago
திரிபுரா முதல்வராக மாணிக் சகா இன்று பதவியேற்றார்

60 தொகுதிகளை  கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக 32 தொகுதிகளிலும், கூட்டணி கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இதனிடையே கடந்த முறை திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு மூத்த பாஜக தலைவரும், திரிபுராவின் முன்னாள் முதல்வருமான பிப்லாப் குமார் தீப் தேர்தலில் வெற்றி பெற்றாலும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அப்படியானால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் முதல்வர் யார்? இந்த குழப்பம் திரிபுரா பாஜகவில் நீடித்தது.

இதைத் தொடர்ந்து திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த பாஜக உயர்மட்ட தலைவர்கள் திரிபுரா விரைந்தனர். இந்த கூட்டத்தில், திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சகாவை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சையும், குழப்பமும் முடிவுக்கு வந்தது.

திரிபுராவின் முதல்வராக மாணிக் சகா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் திரிபுராவின் முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்கிறார். இந்த விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.