முதன்முறையாக அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு

#America #Law #India #Origin #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
முதன்முறையாக அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு

அமெரிக்காவில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக முதன்முறையாக இந்திய அமெரிக்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முதல் முறையாக இந்திய அமெரிக்க வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி நீதிமன்ற கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில் அருண் சுப்பிரமணியன் பொதுமக்களின் வழக்கில் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக விசாரணை மேற்கொள்வார் என்றும் மத்திய நீதிமன்ற அளவிலான பணிகளில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த நீதிமன்ற அமர்வில் சேவையாற்ற உள்ள முதல் தெற்காசிய நீதிபதியும் அருண் சுப்பிரமணியன் தான் என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4