எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிகாரம் கேட்கும் தலைவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் - ரோஹித அபேகுணவர்தன

#PrimeMinister #Minister #ChiefMinister #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
 எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிகாரம் கேட்கும் தலைவர்களுக்கு ஆதரவளிக்கிறேன்  - ரோஹித அபேகுணவர்தன

தாம் முன்வைக்கும் சில கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினால் எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிகாரம் கேட்கும் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதாக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“.. நீங்கள் சொல்லும் தலைவர்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கும் திறன் உள்ளதா? எண்ணெய் விலையை குறைக்க முடியுமா? அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியுமா? எரிவாயு விலையை குறைக்க முடியுமா?

.. அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினரின் சம்பளத்தை உயர்த்துவீர்களா? தொழில் உரிமைகளுக்காக நிற்கிறீர்களா? இவற்றை எப்படி செய்வது என்று விளக்குங்கள். இந்தக் கேள்விகளுக்கு நாங்கள் சரியான பதில் அளித்தால், நாங்கள் ஆதரவளித்து கை ஓங்குவோம். தலைவர் யாராக இருந்தாலும் சரி..” எனத் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4