17 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் கைது

#Death #Police #Arrest #Women #Lanka4
Kanimoli
3 years ago
 17 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் கைது

ராகம பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் ராகம காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த பெண் சிறுமியின் மாற்றாந்தாய் எனவும் அவரது தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிசிடிவியில் பதிவாகி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சம்பவம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராகம காவல்துறையினல்; பல முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4