வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Women #work #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

2 வயதிற்கும் மேற்பட்ட  பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும். 

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வௌிநாடுகளுக்கு பயணிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4