ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் உயிரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

#Court Order #Colombo #SriLanka #sri lanka tamil news #drugs #Lanka4
Prathees
3 years ago
ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் உயிரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் சந்தேகநபர்களான நந்துன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ஹரக்கட்டா மற்றும் சலிந்து மல்சித குணரத்ன அல்லது 'குடு சாலிந்து' ஆகியோரின் உயிரைப் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாளை மறுதினம் 29ஆம் திகதி நீதிமன்றில் அறிவிக்கவுள்ளனர். 

சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாக்க உரிய வேலைத்திட்டத்தை பின்பற்றுமாறு பொலிஸ் தலைமையகத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதிக்கு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் விசாரணை நோக்கத்திற்காக வெளியே எடுக்கப்பட்டால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக உரிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரியான்சி அர்சகுலரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகளின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பொலிஸ் தலைமையகத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி நீதிமன்றில் முன்னிலையானார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4