குடிநீர் தொட்டி மாசுபட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

#Tamil Nadu #Tamilnews
Mani
1 year ago
குடிநீர் தொட்டி மாசுபட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பண்ருட்டியைச் சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த விவகாரம் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டி மாசுபட்டதில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு தவறிவிட்டது.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இதனை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.