தனுஷின் படப்பிடிப்பு பிரச்சனை... விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

#TamilCinema #Actor
Mani
3 years ago
தனுஷின் படப்பிடிப்பு பிரச்சனை... விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே தற்போது நடைபெற்று வருகிறது.

தனுஷ் படத்தின் படப்பிடிப்பில் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புலிகள் காப்பகம் அருகே ஹைபீம் லைட் வைத்து படப்பிடிப்பை நடத்துவதால், யானை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழலும் பிரச்னையாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்த முறையான அனுமதி கிடைத்ததா என தெரியவில்லை, ஆனால், அங்குள்ள கால்வாயையும் சேதப்படுத்தியுள்ளனர்,'' என, குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, வனத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இதனால், படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4