நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டுள்ளது.

#India #Rahul_Gandhi
Mani
1 year ago
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் உத்தரவிட்டுள்ளது.

2019 லோக்சபா தேர்தல்  ​​பிரசாரத்தின் போது, ​​மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்றும், பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி பேசியதாக, பாஜக சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அந்த பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்று முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.எம்.பி., பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், காங்கிரசில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.