திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - தேரர் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் முன்னிலை!
#SriLanka
#Trincomalee
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பிற துறவிகள் உட்பட பத்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறி 2025 நவம்பர் 16 ஆம் திகதி திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த வழக்கு பிப்ரவரி 02 ஆம் திகதி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த 10 பேரும் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்