மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.

#India #Prime Minister
Mani
1 year ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.

அதன்படி, 2023 ஜனவரி 1 முதல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வால் 47.58 லட்சம் அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.