தொழிலதிபர் மரணம்: இந்தோனேசிய தடயவியல் அறிக்கையை இலங்கை இன்னும் பெறவில்லை

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Bussinessman #Death #Lanka4 #srilanka freedom party
Prabha Praneetha
3 years ago
தொழிலதிபர் மரணம்: இந்தோனேசிய தடயவியல் அறிக்கையை இலங்கை இன்னும் பெறவில்லை

இலங்கை வர்த்தகர் ஒனேஷ் சுபாசிங்கவின் கொலை தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகளால் ஹிஸ்டோபோதாலஜிக்கல் மற்றும் நச்சுயியல் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக இலங்கை காத்திருக்கிறது  என தகவல் கிடைத்துள்ளது 

45 வயதான தொழிலதிபர், பிப்ரவரி 3, 2023 அன்று ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தனது மனைவி, மகள் மற்றும் அவரது மனைவியின் உதவியாளருடன் ஜனவரி 20, 2023 அன்று விடுமுறைக்காக இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்தார்.  சம்பவத்திற்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் இந்தோனேசியாவை விட்டு வெளியேறினர்.

காவல் கண்காணிப்பாளர் சி.டி. விக்கிரமரத்ன, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) உத்தரவிட்டுள்ளார். CID தூதுக்குழுவும் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஆதாரங்களின்படி, இந்தோனேசிய அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ஹிஸ்டோபோதாலஜிகல் மற்றும் நச்சுயியல் அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என தகவல் தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4