நீரிழிவு நோய்க்காரர்கள் சர்க்கரை வள்ளிகிழங்கு சாப்பிட்டால் உடலுக்கென்னவாகும்?

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
நீரிழிவு நோய்க்காரர்கள் சர்க்கரை வள்ளிகிழங்கு சாப்பிட்டால் உடலுக்கென்னவாகும்?

நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் கிழங்கு  வகையும் ஒன்றாகும். அதிகமாக கிழங்கு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். இந்த கிழங்கு வகைகயில் சர்க்கரைவள்ளிக் கிழங்கானது முக்கியமாக நீரிழிவு நோய்க்கு எவ்வாறு ஏற்றது என்பதை இந்தப்பதிவில் காணலாம்.

சக்கரைவள்ளி கிழங்கு பயன்கள்:

இந்தக்கிழங்கானது சாப்பிட்ட உடன் நாக்கரிக்கும் தன்மையுடையதுடன் இனிப்புச் சுவை கொண்டது.

இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, பொட்டாசியம், நார்சத்து, பீட்டா கரோட்டின், மாவுசத்து போன்ற சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. இதற்கு பிறகு இதை யாரும் வாங்க மறக்க மாட்டிர்கள்.

  • உடல் எடையை குறைக்க உதவும்.  நிறைய கிழங்கு வகைகள் சாப்பிட்டால்  உடை எடை அதிகமாகும். அதனால் கிழங்கு வகைகளை சாப்பிடுபவர்கள் அதனை மறுக்கிறார்கள். ஆனால் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிட்டுவருவதால் உடல் எடை குறையும் என்றால் அதில் சிறிதளவு கூட கெட்ட கொழுப்புகள் கிடையாது.
     
  • வயிற்று பூண் அல்சரை குணமாக்கும். இந்த அல்சர் வர காரணம் வயிற்றில் ஆசிட் என்னும் அமிலம் சுரப்பதால் அல்சர் வரும். இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் மினரல் உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகளை அளிக்கின்றது. ஆகையால் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை உட்கொள்ளுவது நல்லது.
     
  • கர்ப்பிணி பெண்கள் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடலாம். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு போலிக் ஆசிட் மிகமிக அவசியமான சத்துக்கள் ஆகும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் இதை அதிகம் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெரும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
     
  • இதை ஏன் குழந்தைங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றால் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கிழங்கில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதனை தினமும் உட்கொள்ளலாம். சிலருக்கு அடிக்கடி இருமல் சளி காய்ச்சல் வரக்கூடும் ஆகையால் இதனை உட்கொள்வதால் அதனை தடுக்க முடியும்.
     

முக்கியமாக இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இதை அதிகம் சாப்பிட மறுக்கிறார்கள். இதை உட்கொண்டால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் என்று நம்புகிறார்கள்.

  •  இது முற்றிலும் தவறான கருத்து இது low glycemic index உணவு ஆகையால் இதனை சாப்பிடலாம். இது குறைவதால் இருக்கும் சர்க்கரை  மட்டுமில்லாமல் இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரையினை அளவாக சீராக வைக்கும்.
    ​​​​​​​
  • இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டுவதாவதால் நமக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது ஏனென்றால் இந்த கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கிறது.
     
  • அத்துடன் சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறம் எப்படி வருகிறது என்றால் அதில் உள்ள  பீட்டா கரோட்டின் தான். குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!