உயிர் பிரிந்தாலும் வாழும் காதல்.

#Love #Lifestyle #relationship #Tamil #Tamilnews #Lanka4
Kanimoli
11 months ago
உயிர் பிரிந்தாலும் வாழும் காதல்.

காதலித்தவனை கழட்டி விடும் பெண்கள் தங்கள் காதலனை ஏமாற்றவில்ல. 

மாறாக தங்கள் மீது அவன் வைத்த காதலையும். தன்னையும், தன் வருங்கால கணவனையும், தன் வாழ்க்கையயும்தான் ஏமாற்றுகிறாள். 
அவள் வேறு ஆடவனோடு வாழ்வை ஆரம்பித்தாலும் தன் காதலனின் நினைவில் காதலனோடும் அவன் நினைவுகளோடுமே வாழ முடியும். 

ஆனால் அவளால் ஏமாற்றப்பட்ட காதலனுக்கு அவள் இப்பொழுது ஏமற்றமாக உணர்ந்தாலும் அதை அவன் தான் அதிஸ்டசாலியாகவே எண்ணவேண்டும். 

காரணம் அவள் பணத்துக்காகவோ, அழகுக்காகவோ, படிப்புக்காகவோ அல்லது ஏதோ ஒரு அந்தரங்கத்துக்காகவோ ஏமாற்றியிருந்தால். அவ் ஏமாற்றுச் சம்பவமானது திருமணமாகி அல்லது ஒரு குழ ந் தை பிற ந் த தன் பின்னர் நடந்திருந்தால் அவன் நிலை என்ன?

எனவே காதலித்து இடையில் எ ந் த ச ந் தர்பமாயினும் ஏமாற்றும் காதலியோ காதலமோ ஏமாற்றப்பட்டால் கலங்குவது தவறு. இ ரு ந் தும் உண்மையாக காதலித்த இதயம் நோகத்தான் செய்யும் இருந்தும் மனத்திடம் கொண்டு அவனோ அவளோ நகர்ந்து தனக்கு சரியான ஜோடி சேரும்பொழுது அவர்கள் அதனை புரிவார்கள். 

ஆம் காதலிப்பவர்களே  நீங்கள் காதலிப்பது ஒரு உடலையோ உருவத்தையோ அல்ல ஒரு இதயத்தை  மட்டுமே. அப்படி பார்த்தால் இதயத்தில் அழகானது வசதியானது வெள்ளை. கறுப்பு என வேறுபாடுகள் இல்லை. 

காதலர்களே திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவர் ஈடு கொடுத்து அன்பையும் பொறுப்பையும் பகிர்ந்து. சோடிக்கு ஏற்றவாறு நடந்து. கஸ்டம் வரும்பொழுதும். வசதி வரும்பொழுதும் சரிசமனாய் வாழும்பொழுதுதான் உண்மையான காதல் மேலோங்கி வளரும். ஒருவருக்கு ஒருவர் தோள்  கொடுத்து வாழும்பொழுதுதான் மௌனமான உடல் உறவு தாண்டிய காதல் மறக்க முடியாத காதலாக  வாழும். 
ஆம்
திருமணத்துக்கு முன்னர் காதல் தோல்வி வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த படியில் கவனமாக அடியெடுத்து வையுங்கள். 
அதுவே உயிர் பிரி ந் தாலும் வாழும் காதல்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு