இந்தியாவில் ஒரே நாளில் 1,690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#Corona Virus #Covid 19 #Tamilnews #Fever
Mani
1 year ago
இந்தியாவில் ஒரே நாளில் 1,690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று 2,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 1,690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா எண்ணிக்கை 4,49,74,909 லிருந்து 4,49,76,599 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,406ல் இருந்து 19,613 ஆக குறைந்துள்ளது, ஒரே நாளில் 3,469 பேர் வெளியேற்றப்பட்டதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,25,250 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,31,736 ஆக உள்ளது.