கேரளா படகு விபத்தில் சிக்கிய படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

#Police #Breakingnews #Kerala
Mani
1 year ago
கேரளா படகு விபத்தில் சிக்கிய படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக படகின் உரிமையாளர் நாசர் மற்றும் ஓட்டுநர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது படகை இயக்கிய 3 உதவியாளர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். 22 பேர் பயணிக்க வேண்டிய படகில் 37 பேர் அளவுக்கு அதிகமாக பயணித்ததே விபத்துக்கு காரணம் என்றும், உரிமம் பெறாத படகு ஓட்டுநரும் விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.